Skip to main content

கை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்

கடவுள்களைப் பற்றிக் கவியெழுதும் ஃபேஷனிப்போதெனவே
வாலிப வயோதிக அன்பர்களே வரைகிறேனென் கோட்டோவியத்தை

# வடிவமும் வாழ்வும் தந்த கடவுளுள் முரண்கள் மகா ஆச்சர்யம்
நெஞ்சசகத்து அமிர்தமூட்டி நல்லவை அல்லவை சொல்லி
வாழ்வின் திசைகள் காட்டி வளர்த்த தெய்வத்துள்
வஞ்சகமும் சூதும் வந்ததெப்படி?
புகையிருக்கும் கருவறைக்குள் பகையிருக்குமோ?
தாய்த் தராசும் தடுமாறுமோ?

# கடுங்காய்ச்சலின் களைப்பில் வீடு வந்தவனின்
தலை வருடி மடிகிடத்தி உணவூட்டியப் பரிவின் உன்னதத்தில் சாந்த சொரூபியாய் உயர்வடிவம் கொள்கிறதிக் கடவுள்

# வாரிசாய் வந்த கடவுளின் குழந்தை
கொஞ்சம்(-)ம் கூடுதலாய் (+)ம் கொண்ட தேவகிருபைக்கு
என் மீதான அக்கறையும் தன் மீதான தன்னலமும் அதிகம் அதிகம்

# முரண்களில் முகிழ்த்த முடிச்சு
ஒளிவளையமாய்ப் பின்னியங்கும் இறைமையின்
நேசத்தில் நெக்குருகிப் போகிறது நெஞ்சு


# ஆண்டவம் ஆதிக்கம் செலுத்துமோ ஆடவ உலகம் மறுக்குமோ
சொர்க்கத்துள் சிறை வைக்கும் பிரயத்தனம் தாண்டி தப்பியதென் வரம்

# இச்சை மிகுந்த இறைவியின் காதல் பெரிதா காமம் பெரிதா
உக்கிர அணைப்பின் யானைப்பசிக்க்கு எம்மாத்திரம் சோளப்பொறி

# வரமளித்த தேவதை வாழ்வின் U வளைவு திரும்ப
சாபம் வீசும் எந்திரமாய் மாறியதெங்ஙனம்?
மனம் புரியத் தவமிருக்கிறேன் ஆண்டுகளாய்...

# ‘மிஸ்டுகால்’ கடவுள்களுடனான உரையாடல் சுவையானது;
சுவாரஸ்யமுங்கூட......
சமயங்களில் சலிப்பூட்டி க் களைப்பாக்குபவையுமவைதான்
# ஆண்டவங்கள் ஆறுதலாயிருப்பதோர் அம்சமெனில் கடவுள்களிமன் கண்ணீர்த் துடைத்து ஆற்றுப்படுத்துகையில் தன்யனாகிறேன்

# தான் விரும்பும் தருணங்களில் வாயட யத்தனிக்கும் இறைமைகள் தென்படுவதில்லை
நான் விரும்பும் நேரங்களில்

# கடவுள்களுக்கு செவிகள் உண்டா..
தெய்வதமே தெய்வதமே ஏனெனைக் கைவிட்டீர்?

# கடவுள்களில் ஒன்று கவியெழுத வைக்க
காமத்தால் திணறடிகுமொன்று
நா ருசிக்கு நல்லுணவாய் மற்றொன்று
நடுநிசிநாயாய் உருமும் பிறிதொன்று

# கள்புளிபில் களிக்குமொன்று வோட்கா ருசிக்கும்
பியர் தான் பிடிக்குமொன்றிற்கு
புகைத்து புகைது சாம்பலாக்கும் இன்னொன்று

# ரம்மி ஆடி ஜெயித்த கடவுள் இறந்துபோய் வருஷமாச்சு
லஞ்சம் பின்னோடி வாழ்வைத்தொலைத்துப்
புலம்பும் கடவுளின் திசையெங்கே?

# கடவுள்களைப் பற்றி எழுதும்போதெல்லாம்
ஒலிக்குமோர் விமர்சனம்:”பற்றிய சாத்தான்களையும் எழுதேன்”
அடடே..அடுத்தக் கவிதக் கருவைத் தந்துவிட்டதென் கடவுள்

# கடவுள் குறித்த கோட்டோவியங்களை வரைந்து நீட்டினேன்.
பெருங்குரலெடுத்து சிரித்து ப் பகர்ந்தது தெய்வம்:
”ஆனையைப் பார்த்த அந்தகர் கதை”
ஓயாத நகைப்போசை
எதிரொலித்த்தது இடியாய் அண்டசராசரமெங்கும்
மின்னல் வெளிச்சத்தில் அதிர்ந்தேன்.

- வெறுமையாய்க் கித்தான்

Comments