Skip to main content

இசையாடிக்கிடத்தல்



சொடுக்கிய பொத்தானின் கணத்தில்
முகத்திலாடும் வண்ணத்துடிப்புகளுடன்
விருப்பப்பாடலினை இசைக்கிறது மின்குயிலி
கண்கள் மூடியதொரு மங்கியவெளியில்
சட்டெனப் பூக்கும் பெருவிருட்சம்
நளினக் கிளைகள் சுழற்றி ஓங்கியாடுகிறது
நாதங்கள் விளையும் ஆதிப்பிளவினின்று பெருகுமிசை
பிரவாகமெடுத்தோடுகிறது உள்வெளியெங்கிலும்
நெகிழ்ந்தோடிக் கரைகின்ற ஆன்மாவினை
கைகோதிப் பார்க்கிறேன்
காற்றினில் மெலிதாய் விரவுகிற
சிறுகுழந்தையின் சிரிப்பினை ஒத்திருக்கிறது
கரையொதுங்கித் தளும்பிக் கிடப்பது
தெய்வீகமெனப்படுவதான ஒன்று
திடமென ஏதுமில்லாப் பரவெளியிது
புறஞ்சூழ்ந்திருக்கும் யாவருக்கும்
நான் தூங்கிப்போய்விட்டாலும் பரவாயில்லாமல்
வேய்சரீரத்தை தொந்தரவிக்காது ஆடிக்கிடத்தலும்

Comments

Popular posts from this blog