Skip to main content

விஸ்வரூபம்

மூன்றடி நிலம்தானே என்றிருந்த

மஹாபலியின் கர்வத்துடன் இருந்துவிட்டேன்

வெறும் பார்வைதானே என்று

வானளந்து மண்ணளந்து

அவன் தலை அளந்த

வாமனன்போல் உன் காதல்

என்னுயிர் அளந்து உடலளந்து

இன்னும் ஓர் அடிக்கு

எதை அளக்க உன்னில்

எனக் கேட்டபடி..................

Comments

Popular posts from this blog