Skip to main content

மேகத்திலுன் முகம்


இறுதி நிராகரிப்பின்

இறுதிச் சொல்லைச்

சொல்லிவிட்டு நீ

செல்கையில்

உன் முகத்தைக்

காட்டியபடியே மேகம்

பேய்மழையின்

கோரத் துளிகளால்

கிழித்தெறிந்தது

பெயர் தெரியாத

பூவிதழ்களை

அவை சேற்றில்

கலந்து எங்கோ

முகவரியற்ற

இடங்களுக்கெல்லாம்

இழுத்துச் செல்லப்பட்டபோது

நடை பிணமாய்

நடக்கலானேன் நானும்

Comments

Popular posts from this blog