Skip to main content

 

சூம் மூலமாக கவிதை வாசிக்கும் இருபதாவது கூட்டம் -

பெண் கவிஞர்கள் கூடும் கூட்டம்

அழகியசிங்கர்

நாளை (09.10.2020) நடைபெற உள்ள கூட்டம் பெண் கவிஞர்கள் கூடுகிற கூட்டமாக மாற்றி உள்ளேன்.
சந்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன்..பார்வையாளர்களாக ஆண்கள் கலந்து கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆண்கள் கருத்துத் தெரிவிக்கக் கூடாது.
1970ஆம் ஆண்டு 'கசடதபற' என்ற சிற்றேடு பரபரப்பான ஒரு சிற்றேடு. அந்தச் சிற்றேட்டை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிப் பார்த்தேன். ஒரு இதழிலும் ஒரு பெண் கவிஞரின் படைப்பைப் பார்க்க முடியவில்லை.

இது குறித்து கசடதபற ஆசிரியர் நா.கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்பு கொண்டு உண்மையா என்று கேட்டேன். அவரும் சொன்னார் யாரும் எழுதவில்லை என்று.

இது யோசிக்க வைத்தது. அதன் விளைவாக இந்தக் கூட்டம்.

கவிஞர் முபீன் அவர்கள் பெண் கவிஞர்கள் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசும்படி அழைத்திருக்கிறேன்.

Topic: Virutcham Meeting
Time: Oct 9, 2020 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89302911984?pwd=bmNrd3k5OGVkZURrQ2tHOFFaUkZBUT09

Meeting ID: 893 0291 1984
Passcode: 405079

Comments