Skip to main content

இலைகளற்று பூக்களற்று....

கிணற்றடியில்
சலவைக்கல்லில் குமித்துக் கிடக்கும்
ஈரத் துணியில்

மடிப்புக் கலையாமல் காத்திருக்கிறது
எனது தனிமை

உலர்த்தும் கணந்தோறும் நெடுகப் படர்கிறது
வான் நோக்கி மௌனக் கொடி
இலைகளற்று, பூக்களற்று

நட்சத்திரங்களைத்
தொட்டுவிடும் வேட்கையோடு


     இளங்கோ

Comments

Popular posts from this blog