Skip to main content

காவேரி



 
         உடைகளில்லாதிருப்பதிலொரு
         உல்லாசத்தை உணர்கிறேன்
         உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை
         ந்தியில் நனைந்து கரைக்கிறேன்
         என் நேற்றைய வானவில்
         நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை
         ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி
         வேடிக்கை பார்க்கிறேன்
         புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க
         இலைகளால் விசிறிக்கொள்ளும்
         கரையோர வாழைமரங்கள்
         ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்
         உறுமீன் வருமுன் உடற்பயிற்சி
         செய்யுமொரு கொக்கு.
         மாமரத்துக் கிளிகளுக்கெப்போதும்
         மாளாத சந்தோஷம்
         உடல் கவ்விய உடைகளுடன்
         அவள் அருகில் வருகிறாள்.
         அவளுள் நுழைய இசைவை விழையும்
         என் விண்ணப்பங்களை
          நிராகராக்கவில்லையெனினும்
          சம்மதிக்காமலென்னைக் கொல்லும்
         மல்யுத்த உடற்கட்டுக்காரி
         கொங்கை குலுங்க சிரித்தபடி வருகிறாள்
         கிளிகடித்த மாம்பழமொன்றை
         என்மீது விட்டெறிந்து
         கரையேறிப் பறக்கிறாள்
         பின்தொடரும் பரபரப்போடு நான்
         நீந்திக் கரைசேர்கையில்
         களவு போயிருந்தததென்
         அம்மணம் மறைக்கும் திரை.
 
 
     
 

Comments

Marc said…
அருமையான பதிவு வாழ்த்துகள்