Skip to main content

வன்முறையின் சாட்சி

எட்டுக்காலம் அளவில்
அந்தச் செய்தி வந்திருந்தது.

ரத்தம் வழியும் புகைப்படங்களுடன்
பேருந்தும்
பேருந்தும் பேருந்தும் மோதி
முப்பத்தாறு பேர்
சம்பவ இடத்தில் பலி

பிய்ந்த கைகள்
உடைந்த கால்கள்
சிதைந்த தலை

ஆதி வன்முறையின்’
கடைசி சாட்சியென
இன்னும் அதிகமாய்
இரண்டு லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது பத்திரிக்கை.

Comments

Unknown said…
nice one latha magan