Skip to main content

திருஷ்டி

உனது வார்த்தைகளை
எந்த அகராதியிலிருந்து
எடுத்தாள்கிறாய்
பெய்ய மறுக்கிறது மழை
முதல் துளியை
உனது ஸ்பரிசத்தில்
விழச் செய்து
ஜென்ம சாபல்யம்
அடையத் துடிக்கிறது
உனது திருவடிகளை
எனது வீட்டை நோக்கி
திருப்ப மாட்டாயா
உன்னை உரசிய தென்றல்
மண் மீது ரதியைக் கண்டேன்
என துள்ளிக் குதிக்கிறது
தேவதை உலகம்
களையிழந்து போயிருந்தது
தேவி அவள் பிறந்து
பூமிக்கு வருகை தந்ததினால்
கோயில் பிரகாரத்தை
வலம் வருகிறாய்
தெய்வம் உனது வீட்டில்
குடியிருப்பதை அறியாமல்
ஊர் கண்ணெல்லாம்
உன் மீது தான்
அத்தையிடம் சொல்லி
வைக்க வேண்டும்
தினமும் திருஷ்டி
கழிக்கச் சொல்லி.

Comments

Popular posts from this blog