Skip to main content

வருந்துகிறேன்

காலையில் வண்டியில் திருவள்ளூர் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தச் செய்தியை sms மூலம் பாரதிமணி அனுப்பியிருந்தார். வெங்கட்சாமிநாதன் மனைவி மரணம் அடைந்த செய்தியை. வெங்கட்சாமிநாதன் வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொருமுறையும், வரவேற்று உபசரிப்பவர் அவர் மனைவியும் கூட. சமீபத்தில் கீழே விழுந்து, அடிப்பட்டுக் கொண்டார் வெங்கட்சாமிநாதன். அந்தத் துயரத்தை வெ சாவின் மனைவியும் வெளிப்படுத்தினார். அந்தச் சமயத்தில் இருவரையும் போய் பார்த்ததுதான். சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அது ஒருவிதமான நரகம். திருவள்ளூர் போய்விட்டு மாலைதான் திரும்பினேன். வெ சா வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. மனைவியை இழந்து நிற்கும் அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மனைவியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


- அழகியசிங்கர்








Comments