Skip to main content

நூற்றாண்டில் 3 புத்தகங்கள்

 அழகியசிங்கர்




சமீபத்தில் என் நண்பர் கு.மா.பா. திருநாவுக்கரசு, புகழ்பெற்ற அவருடைய தந்தையாரின் 3 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த 3 புத்தகங்களில் நான் அதிகமாக விரும்பியது கு.மா.பா வின் திரைப்படப் பாடல்கள்.
1960 ஆண்டில் குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்தில் குமாபாவின் பாடலான

சிட்டு சிட்டு சிட்டு - நீ
செய்யாதே பகட்டு - உன்
வெத்துவேட்டு நம்மகிட்ட
வேதாளம் மூட்டைகட்டு

என்ற பாடலை எப்படிப் பாடியிருப்பார்கள் என்பதை அறிய ஆசை. மேலும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்குமென்று தோன்றுகிறது. அவருடைய அம்பிகாபதி என்ற படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடலான 'மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே...கண்ணே' என்ற பாடல் எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும்.
1957ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை அவர் இயற்றிய 256 பாடல்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் சில பாடல்கள் பதிவு செய்யக் கிடைக்கவில்லை.

அவருடைய மூன்று புத்தகங்களையும் வழக்கம்போல் நடைபெற்ற கவிதை வாசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். எல்லோரும் புத்தகங்களை வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

பாடல்களைத் தவிர அவருடைய சிறுகதைகள், அவருடைய வாழ்க்கை வரலாறும் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்புக்கு : திருநாவுக்கரசு - 9840634279




"

Comments