Skip to main content

சுட்டிப் பெண்ணே ஆரபியே

எழுந்ததும் ஓடிவந்து என் போனைத் தட்டிப் பறிக்கிறாய் பின் என்னை விட்டு ஓட்டமாய் ஓடுகிறாய் இதோ - இப்போது இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோம் என்றால் புரியாமல் முழிக்கிறாய் தலையை வாரவிடாமல் உடைகளைக் கழற்றி எறிந்து அங்கும் இங்கும் குதிக்கிறாய் அம்மாவையும் அப்பாவையும் பாடாய்ப் படுத்துகிறாய் உன் மழலைக் குரல் இன்னும் காதில் ஒலித்தவண்ணம் உள்ளது சுட்டிப் பெண்ணே ஆரபியே.... 03.05.2019 பீனிக்ஸ் காலை : 6

Comments

Popular posts from this blog