Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 137




அழகியசிங்கர் 



நதி



கி.தாமரைச்செல்வன்




மலையினிடுக்கில்
சுனையாய் தோன்றி

போகிற போக்கில்
ஒடுங்கிச் சிறுத்து
ஓசை காட்டி

அகன்று பெருத்து
அமைதியாய் நடந்து

ஆர்ப்பரித்து
அருவியாய் விழுந்து

நதிக்கரைதோறும்
நாடு வளர்த்து

செம்புலம் பெயர்ந்தால்
செந்நீராக

கடல்மடி நுழைந்தால்
வானிறமாக


நன்றி : மனதினில் கவிதை பூவெழுத - கி.தாமரைச்செல்வன் - பொதினி பதிப்பகம், 9 சுப்பையா நகர் அனெக்ஸ், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 056 பக்கங்கள் : 100 - விலை ரூ.120 - தொடர்புக்கு : 9841086696





Comments