Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 134



அழகியசிங்கர்  




அறிவேனா



சி.சு.செல்லப்பா



கனவுக்குள் கனவு;
பிளந்து
இமை திருகி- எழ
விழித்ததுண்டு

நினைவுக்குள் நினைவு;
மூழ்கி
சொரணை தப்பி - விழ
உறங்கிய துண்டு

வாழ்வுக்குள் வாழ்வு;
தெளிந்து
நேர் ரோட்டில்
நடந்தேனா

சாவுக்குள் சாவு;
வற்றி
ஓயும் பொழுதை
அறிவேனா



நன்றி : மாற்று இதயம் - சி.சு.செல்லப்பா - எழுத்து பிரசுரம் - முதல் பதிப்பு - மே, 1974 - பக்கங்கள் : 104 - க்ரவுன் அளவு - விலை : ரூ. 4,00

Comments