Skip to main content

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு..

துளி : 15 - வெங்கட் சாமிநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறு..



அழகியசிங்கர்





சமீபத்தில் பிரமிளின் எல்லா எழுத்துக்களையும் 6 புத்தகங்களாக பிரமிளின் பக்தரும் நெடுங்கால நண்பருமான கால சுப்ரமணியம் கொண்டு வந்துள்ளார்.  இது அரியஞ்; பணி.  இதை சுப்ரமணியம் மாதிரி ஒரு தீவிரவாதிதான் செய்து காட்டமுடியும்.  
இதேபோல் வெங்கட் சாமிநாதனுக்கு ஒருவர் முயற்சி செய்தால் 10 புத்தகங்களுக்கு மேல் ஒருவர் கொண்டு வர வேண்டும்.  அவ்வளவு எழுதியிருக்கிறார் வெங்கட் சாமிநாதன்.  ஆனால் இதை யாரால் செய்ய முடியும்?  அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் சேகரிக்க வேண்டும்.  அதன் பின் அவர் எழுதாத கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.  அதையெல்லாம் கண்டு பிடிக்க வேண்டும்.  அவருடைய நண்பர்கள்தான் இதற்கெல்லாம் உதவி செய்ய வேண்டும்.  நான் முயற்சி செய்யலாமென்று அவர் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் இன்னும் எத்தனைப் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பது என்னால் ஊகிக்க முடியவில்லை. 
பிரமிளுடைய எல்லாக் குணங்களும் வெங்கட் சாமிநாதனுக்கும் உண்டு.  யாரையாவது பிடிக்கவில்லை என்றால் கடைசி வரை அவருக்குப் பிடிக்காது.  கடைசிவரை அசோகமித்திரனை அவருக்குப் பிடிக்கவில்லை.
பங்களுரில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  என்னுடன் அவர் சரியாகப் பேசவில்லை.  காரணம் நான் அசோகமித்திரனுக்கு வேண்டியவன் என்று அவரே நினைத்துக் கொண்டது.  நான் அதுமாதிரி இல்லை என்று எவ்வளவு சொன்னாலும் அவரை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.  இப்படி ஒரு பிடிவாதக்காரரை தமிழ் இலக்கிய உலகில்தான் பார்க்க நேர்கிறது.   பிரமிளும் அப்படிப்பட்டவர்தான்.  ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பார்க்க மாட்டார். பேச மாட்டார். 
üநினைவுகளின் சுவட்டில்ý என்ற பெயரில் வெங்கட் சாமிநாதன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.  முதல்பாகம் அகல் வெளியீடாக டிசம்பர் 2009ல் வெளிவந்துள்ளது. 336 பக்கங்கள் கொண்ட இப் புத்தக விலை ரூ. 170தான். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளிவந்துள்ளது.  இப் புத்தகத்தை வெளியிட்டவர் மெய்ப்பொருள்.  464 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரு.420. 
முதல் தொகுதியில் தன் சுய சரிதையில் வெங்கட் சாமிநாதன் ஒரு இடத்தில் இப்படி கூறியிருக்கிறார்.
üஎன் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை.  எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.  அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறி  அவர்கள் உன்னதமான மனிதர்கள்தான்.  சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன்.  எழுத்துலகிலும் வெளியிலும் அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த  மனிதர்கள்தான்.ý  என்றெல்லாம் எழுதி உள்ளார். வெ சா குறிப்பிடுகிற மகாராஷ்டிரத்தில், ஹம்ஸô வாடேக்கரும், வங்காளத்தில் வினோதனியின் சுய சரிதங்களையும் வாசிக்க வேண்டும்.
இரண்டாவது தொகுதியான நினைவுகளின் சுவட்டில்  பதத்கம என்னிடம் விற்பனைக்குள்ளது.  ரூ.420 விலையுள்ள இப் புத்தகத்தை ரூ.300 விற்க விரும்புகிறேன்.  விருட்சம் வளர்ச்சி நிதிக்காக ஸ்ரீனிவாசன் அளித்தது.  வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

Comments