Skip to main content

இரண்டு கவிதைகள்


அழகியசிங்கர்


ஒன்று

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும்                                                             தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்த சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊரந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்

இரண்டு


இந்த இடத்திற்கு
நான் வருவதற்குமுன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தோன்றியது...
                                                                        (2011)

Comments

Popular posts from this blog