Skip to main content

ஏழு வரிக் கதை

ஆயிரங்கால் மரவட்டை


நகுலன்



மணி4.30 ஆகிவிட்டது.  வெளியில் போக ஒரு பரபரப்பு.  வேறு காரணமும் உண்டு.  

சென்ற வழியில் நண்பனைச் சந்தித்தேன்; அவனும் என்னைப் போல ஒரு புஸ்தகப் பிரியன்.  அப்பொழுதுதான் üüகரிச்சான் குஞ்சுýý வின் üüபசித்த மானிடம்ýý படித்து முடித்திருந்தேன்.  அதை யாரிடமாவது சொல்லி என் அகமகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று ஒரு துடிப்பு.  நானும் அவனும் கரிச்சான்குஞ்சுவின் படைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  அவனும், üகரிச்சான் குஞ்சுýவின் சிறுகதைகளைப் படித்திருக்கிறான்.

அப்பொழுது நீ வந்து சேர்ந்தாய்; பேச்சு பரிசு கொடுக்கும் ஸ்தாபனங்களைப் பற்றித் திரும்பியது.  எந்த எந்த ஸ்தாபனத்தில் எப்படி எப்படி இந்தப் பரிசு விஷயம் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் பேச்சுத் திரும்பியது. 

ஆலோசனைக்குழு, காரியக் கமிட்டி, இவற்றில் எதில் எதில் யார் யார் இருக்கிறார்கள், இவரில் யார் யாரைவிட முக்கியம், பரிசு பெற என்ன என்ன தகுதிகள், எதை எதை எப்படி எப்படிச் செய்யவேண்டும் என்றெல்லாம் பேச்சுத் திசை மாறிப் போனதும், என் நண்பன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  நான், "பேசிக் கொண்டிருங்கள்.  எனக்கு நூல் நிலையத்திற்கு 7 மணிக்கு முன் போக வேண்டும்," என்று அங்கிருந்து மெல்ல நழுவி விட்டேன்.  என் நண்பன் அடுத்த நாள் நான் அவனைக் கண்டால் அவன் என்னைத் திட்டுவான் என்பது எனக்குத் தெரியும்.

மரவட்டை, தான் எப்படி நகர்கிறது என்று, தன் இயல்பாக-இயங்கும் தன்மையைச் சற்று மறந்து, யோசனையில் ஆழ்ந்தபோது, அதற்கு ஆயிரங்கால்கள் இருந்தும், அசைய முடியாமல் முடமாகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள்.  

(நன்றி : கவனம் ஜøன் 1981)

Comments

Popular posts from this blog