Skip to main content

அறிவிப்பு

   
 அழகியசிங்கர்
 
 

 
 திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா
 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெளியாகி இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்த நாவல்களில் விருட்சம் வெளியீடாக வந்த எழுத்தாளர் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய üசங்கவைý என்ற நாவல் 2015ம் ஆண்ட திருமதி ரங்கம்மாள பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிப்பு விழா  27.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஸ்தூரி சீனிவாசனம் அறநிலையம், கோயமுத்தூரில் நடைபெற உள்ளது.

 அன்று காலை நாவலாசிரியையும், நாவலைப் பிரசுரம் செய்த பதிப்பாளரையும் கௌரவம் செய்கிறார்கள். 

 அந்த விழாவிற்கு பதிப்பாளர் என்ற பொறுப்பில் நானும் செல்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 1983ஆம் ஆண்டிலிருந்து திருமதி ரங்கம்மாள் பரிசு நாவல்களுக்குப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.  1985ல் பாலங்கள் என்ற சிவசங்கரி நாவலுக்குப் பிறகு, இ ஜோ ஜெயசாந்திக்கு 2015ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  நாவலுக்குப் பரிசாக 17 முறைகள் கொடுக்கப்பட்ட விருதில், இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்கள்தான் இதுவரை பரிசு பெற்றுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments