Skip to main content

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்


அழகியசிங்கர்




கவிதை 3

வெள்ளம் வடிந்த அடுத்தநாள்
காலை
பால் எங்கே கிடைக்கிறது
என்று அலைந்து கொண்டிருந்தேன்
எங்கள் தெரு வீரமணி
மாடுகளை வைத்து வியாபாரம்
செய்வான்
அவனிடம் உள்ள மாடுகளை
அடுத்தத் தெருவிற்கு மேட்டுப்பகுதிக்கு
ஓட்டிச் சென்று விட்டான்
மழைத் தூறலில்
அவனும் மாடும் நனைந்தபடி
பால் கறந்து கொண்டிருந்தான்
அவனைப் பார்த்து சிரித்தேன்
üதருகிறேன் அரை லிட்டர்
யார் கண்ணிலும் படாதீர்கள்..ý
என்றான்.

கவிதை 4

சொல்கிறேன் கேளுங்கள்
இனிமேல் மழை என்றால்
வெள்ளம் வருமென்று ஞாபகம்
வந்து
பதட்டமடைய நேர்கிறது
என்ன செய்வது?


கவிதை 5

தெருவில் வெள்ளம்  புகுந்த
காலத்தில்
மொட்டை மாடியில் போய்
தஞ்சம் அடைந்தோம்
சுற்று முற்றும் பார்த்தோம்
வானத்தைப் பார்த்து
கையெடுத்துக் கும்பிட்டோம்
பின்
எதிர் வீடு பக்கத்து வீடென்று
எல்லோர் வீட்டு
மொட்டை மாடிகளையும்
பார்த்தோம்
இவ்வளவு பெண்களா
எங்கள்     தெருவில்.....



Comments

Popular posts from this blog