Skip to main content

பால்ய வனம்

  
 
மிருணா      
பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்/
நினைவு படுத்துகிறது பால்யத்தை./
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்/
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு/
வாய்த் தண்ணீருள் மூழ்கிய/
கனகாம்பர விதைகள் வெடிக்கும்/
துடி துடிக்கும் இதயம்./
தட்டான்கள் ரீங்கரிக்க/
வண்ணத்துப்பூச்சி பிடிக்க/
ஓடும் பசிய வெளியில்/
பதிந்திடும் பாதச் சுவடுகள்/
நூறு வண்ணத்துப் பூச்சிகள்./
பின் அயர்ந்து தூங்குகையில்/
வயலெட், மஞ்சள் டிசம்பர் பூக்களைப் பற்றிய/
சிறிய அவாக்களும்/
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும்/
பெரும் வனக் கனாக்களும்./
முட்களை மறைத்தபடி/
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்/
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்/
சிக்காமல் ஒரு சிறுமி/
பால்யத்தின்/
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி/
அதன் எலுமிச்சை வாசனை பரவ/
பச்சை வண்ண சீப்புக் காயை/
தலையில் தேய்த்தபடி/
ஓடிக் கொண்டே இருக்கிறாள்/
எதன் பின்னும் அல்லாமல்./
                      

Comments