Skip to main content

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)



            அக்ரகாரத்துக் கதவுகள்

            எங்களூர் அக்ரகாரத்தில்
            அதிசியங்கள் ஆயிரம் உண்டு
            செம்மண் பட்டையிட்டு
            செங்காவிச் செறிவீச்சில்
            கொலுவிருக்கும் வீடுகளின்
            ஜன்னல்களுக்கோ
            கதவுகளே இல்லை -
            ஆனாலும்
            டெர்ரிகாட் பளபளப்பில்
            குதிகால் நடையுயர்த்தி
            நட்ட நடுத் தெருவில்
            நீள நடந்தால்
            கறுப்பு சிவப்பு
            பழுப்பு மாநிறப்
            பரபரப்பு முகங்கள்
            கதவுகளாய் முளைக்கும்.

                        நா. விச்வநாதன்

Comments