Skip to main content

ஓசிப்மெண்டல்ஷ்டாமின் கவிதை


  கவிதை எண் 17

 குளம் எங்கே அசுத்தமாகவும் கலங்கலாகவும் இருக்கிறதோ
 அங்கே நான் வளர்ந்தேன் ஒரு சலசலக்கும் நாணலாக
 மேலும் ஒரு தளர்ந்த, மென்மையான பேராசையுடன்
 சுவாசிக்கிறேன் எனக்கு மறுக்கப்பட்டிருக்கிற ஒரு வாழ்வினை

 மண்ணினுள் ஒரு குளிர்ந்த வளைக்குள் நான் கீழே அமிழ்ந்து
 போவதை
 எவரும் பார்ப்பதில்லை
 இலையுதிர் காலத்தின் சிறிய இடைவெளியில்
 ஒரு சரசரப்பு என்னை வரவேற்கும் பொழுதில்

 நான் எனது குரூர வலியில் கொண்டாடுகிறேன்
 மேலும் என் வாழ்வில், அது கனவு போலிருக்கிறது
 ரகசியமாக நான் எல்லா மனிதர் மீதும் பொறாமைப்படுகிறேன்
 மேலும் ரகசியமாக அவர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்

     தமிழில் : பிரம்மராஜன்

Comments