Skip to main content
புகழ்
இப்படிச் சொல்கிறேனேயென்று
என்மீது வருத்தப்படாதீர்கள்.
வேறெப்படிச் சொல்வதென்று
எனக்குத் தெரியாதபோது.
நகரத்தில் பாருங்கள் நாளுமொரு
தனிவீட்டை இடிக்கிறார்கள்
குடியிருப்புகள் கட்டுகிறார்கள்
அதுபோல்தானிதுவும்.
தாத்தா கட்டினாரென்பதால்
வௌவால்கள் நிறைந்த வீட்டில்
வசிக்கமுடியுமா, சொல்லுங்கள்.
இடித்துப் புதிதாய் கட்டுவதுபோல்த்தானிதுவும்.
பெருமையேதுமில்லாத பேய்வீடிது
நள்ளிரவுக் கள்வர்கள் ராவணத்துறவிகள்
கபாலிகர்களின் விடுதியான வீடிது
நகரின் நடுவில் நிற்கிறது பெருங்கேடிது
இதற்குப் பதிலாய் புதிதாய்
அனைவரும் பயன்பெறுவதாய்
சுயமாய் நாமொன்று கட்டலாமென்கிறேன்
உங்களுக்குச் சம்மதமானால்
என்க்குக் கைகொடுங்கள் இந்த
பேய்வீட்டை இடியுங்கள் தரைமட்டமாக்குங்கள்.
உங்கள் புகழை ஒரு கவிதையாயெழுத
எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள்.
லாவண்யா
கிளி
எரிமலை மனது
ஏரியாகிக் குளிர்ந்திருந்த்து
சுடுசொல் உதடு
சுமுகமாகப் பேசக்கற்றது
மயிரைக்கட்டி மலையைப்
பெயர்க்கும் சூதாடி மாயமானான்
அமைதி புதிதாயிருந்த்து
ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிலாவைப்போல
நிம்மதி ரிஷ்யச்ருங்கர் முதலில்
கண்ட பெண்ணாயறிமுகமானது
எப்படியிதெல்லாம் நிகழ்ந்த்தென்றால்

வேப்பம்பழம் தின்று சலித்து
நமக்குத் தெரியாத ஏதோவொன்று
நம்மைமீறி நிகழ்(த்து)வதுணர்ந்து
கிளியாய் உருமாறியதிலிருந்து
லாவண்யா

Comments

வித்தியாசமான கவிதை... அருமை... பாராட்டுக்கள்...