Skip to main content
உறக்கத்தின் மீது.

நெடுஞ்சாலையோரத்தில்
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நடை பாதைவாசிகள்.

அவ்வுறக்கத்தின் மீது
ஓடிக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற வாகனங்கள்.

 ஒரு வினாடி
வெறுப்புத்தோன்றி மறைகிறது.
விழித்தபடிவாகனம்
ஓட்டுபவர்களுக்கு
உறங்கும்நடை பாதைவாசிகளின்
உறக்கத்தின் மீது.

ரவிஉதயன்

Comments

Popular posts from this blog