Skip to main content

பூனைகள்.....பூனைகள்.....பூனைகள்...27




பூனை


ப.மதியழகன்


ஆட்களை கண்டால்

உற்று நோக்கும்

மாயக் கண்களில்

ஆயிரம் மர்மங்கள்

புதைந்திருக்கும்

அதுவும் கறுப்புப் பூனையைக்

கண்டாலே

மனசு விதுக்கென்று

இருக்கும்

நாய்

வீட்டில் நல்லது நடக்கும்

நாலுவாய் சோறு

திங்கலாம் என்று

நினைத்திருந்தால்

பூனை

எப்ப இழவு விழும்

யாருமற்ற வீடாகும்

என்று நினைக்கும்

புழங்காத இடம்

தேடியலையும்

பூனை மனிதர்களும்

உலகில் உண்டு

பதுங்கிப் பாயும்

புலியினமாயிற்றே

பூனை!

Comments

Popular posts from this blog