Skip to main content

கழைக்கூத்தாடிச் சிறுவன்

எதற்காகவென்று
தெரியவில்லை
கண்ணீர் வந்தது
சாலையோரத்தில்
தன்னையே சாட்டையால்
அடித்தடித்து
வருவோர் போவோரிடம்
காசு வாங்கிக்கொண்டிருந்தான்
கழைக்கூத்தாடிச் சிறுவன்
தினப்படி நடப்பது தான் இது
இன்று என் செங்குருதி
அவன் உடலிலிருந்து
வழிந்தது.

Comments