Skip to main content

மழைக் குடை நாட்கள்






மழையையே குடையாக்கி நடந்த நாட்கள்
மகா உன்னதமானவை
அரைநெல்லிக் கனி தின்று
தண்ணீர் பருகும் அனுபவம் போல
வாழ்வ்க்கு சுவை, திருப்பம் சேர்ப்பவை.

சுத்த வீரனின்
விழுப்புண், குருதி, வலியாகி
புகழ் உறுதியை
முழுமையாய் நிறை நிறுத்துபவை
நடக்கும்போது மழை நாட்கள்
குளிர் முட்களாகித் தைப்பினும்
கடந்த பின்பு
சூர்ய கர்வம் அடக்கும்
கைக்குட்டையாகி நிழல் தருதலால்
மழைக்குடை நாட்கள்
நன்றியறிதலுக்குரியவை
எப்பொழுதும்

தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரியும் கோ கண்ணன் 1969 ம் ஆண்டு பிறந்தவர். பார்வையிழப்பையும் மீறி பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆசிரியர் பட்டப் படிப்பும் படித்தார்.


Comments