Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......17








பூனை

ஆலா

எலிமட்டும் பிடிப்பதில்லை
எல்லோர் வீட்டிலும் பூனை
பூரான், தேள், பல்லியென
பசியெடுத்தால் நச்சுயிரியைப் பிடித்துத் தின்னும்
எங்கள் வீட்டு வாசலில் ஒருநாள்
கொம்பேறிமூக்கன் குட்டியொன்றை
வாயில் கவ்வி வந்தது பூனை
பின்னங்காலால் தூக்கியெறிந்து
முன்னம் வேடிக்கைப் பார்த்தது.
ஓடவிட்டு பாம்பைப் புரட்டி எடுத்தது
துண்டாடித் துண்டாடித் தின்று தீர்த்தது

பால் குடிப்பதும்
பசிக்குச் சோறு தின்பதும் இயல்பல்லவே.
யாரும் பார்க்காத நேரத்தில்
குழித்தோண்டி மலம் மறைக்கும்
இயற்கையின் எழில் உருவே பூனை

புலியினம்தான் பூனையும்
போனதெப்படி அதன் போர்க்குணம்?
இந்தியாவில் ஒண்டி வாழும் தமிழர்களைப்போல்
மரபணுவின் வீரம் மங்கி விட்டதோ

அண்டிப் பிழைப்பது அழகல்ல
ஆகவே எனக்குப் பூனையைப் பிடிக்காது
புலியைப் பிடிக்கும்



Comments

Popular posts from this blog