Skip to main content

சிறு கவிதைகள்




01

அழைத்துப் போய்வந்த

ஆசிரியரின் அத்தனை

கெடுபிடிகளுக்குப் பின்னும்

இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்

இன்பச் சுற்றுலா என்றே.
o
02
இலவசமாய்

அரிசி டிவி
இயற்கை
உபாதைக்கு

கட்டண
கழிப்பிடங்கள்.
o
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.

இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.

இளவயது மாதொருத்தியை

இடித்தபடி.

o

04

யாருமற்ற பூங்காவில்

ஊஞ்சல்

ஆடிக்கொண்டிருக்கிறான்

என் மகன்.

எவரையோ சேருமென்று

கவிதைகள்

எழுதிக்கொண்டிருக்கிறேன்

நான்.
o
05
ஏதோவொன்றின்

தொடர்பாகவே
எதுவொன்றின்

நினைவும்.

Comments

அத்தைனையும் நல்லா இருக்கு.
Boston Bala said…
நன்றி
Anonymous said…
நல்ல கவிதைகள்.எளிய வார்த்தைகளில் நேராகச் சொல்லப்படிருப்பது அதிக அடர்த்தியைத் தருகிறது.

உங்கள் இரண்டாம் கவிதையை மிக ரசித்தேன். என் தோழன் செல்வேந்திரன் கவிதை ஒன்று.

அடிக்கிற தண்ணிக்கு
அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கு
குடமெல்லாம் தவமிருக்கு
அழகான கவிதைகள்!!!
Unknown said…
நன்றி நண்பர்களே.

செல்வராஜ் ஜெகதீசன்
முதல் மூன்று கவிதைகளின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நான்காவதும் ஓகே. கடைசி அவ்வளவாக ஈர்க்கவில்லை. கவிதைகளின் பக்கம் அவ்வளவாக எட்டிக்கூட பார்க்காத என்னை, செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் திரும்பி பார்க்க/படிக்க வைத்தன. கவிதைகளுக்கு நன்றி!!!
Unknown said…
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் யோசிப்பவர்.

செல்வராஜ் ஜெகதீசன்
Chandran Rama said…
Enjoyed reading your poems.
.
simple thoughts with perverse
expressions..

keep writing... all the best
Unknown said…
பாராட்டுக்கு நன்றி ஆறுமுகம்.
anujanya said…
எல்லாமே நல்ல வந்திருக்கு. முதலும் நான்காவதும் மிகப் பிடித்தது. வாழ்த்துகள் செல்வா.

அனுஜன்யா
Unknown said…
வாழ்த்துக்கு நன்றி அனுஜன்யா.