Skip to main content

 



14.12.2020



சூபியும் சுஜாதாவும் என்ற மலையாள திரைப்படம் 




அழகியசிங்கர் 



சூபியும் சுஜாதாவும் என்ற படத்தை ப்ரைம் வீடியோவில் பார்த்தேன். விட்டு விட்டுத்தான் பார்த்தேன். 
என்னால் மறக்க முடியாத மலையாளப்  படம்.  வாய் பேசமுடியாத ஒரு பெண்ணுடன் ஒரு சூஃபி சந்நியாசி காதலிப்பது போல் படம்.  உண்மையில் இருவரும் காதலிக்கிறார்கள்.  

கதை கேரளாவில் ஒரு கிராமத்தில் நடக்கிறது.  இந்தக் காதல்  ஈடேறாது என்று படம் ஆரம்பிக்கும்போதே தெரிந்தாலும், இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதை. 

சுஜாதா என்ற பாத்திரமேற்று நடித்த நடிகை அதித்ராவ்  மறக்க முடியாத கதை  பாத்திரமாக கதையுடன் ஒன்றி விடுகிறார்.  அவருடைய ரசிகர்கள் ரொம்ப நாட்களுக்கு இந்தப் படத்தை ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்.

அதித்ராவ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.  
சூபியாக நடிக்கும் தேவ் மோஹனுக்கு இது முதல் படம். இந்தப் படத்தில் முக்கியமாக உரையாடல்களே இல்லை.  

இந்தப் படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் பார்த்தேன்.  இந்தப் படம் மெதுவாகப் போகிறது.  இந்தப் படத்தில் கதையே இல்லை என்றெல்லாம். இந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.


நான் ப்ரைம் வீடியோவில் பார்த்தாலும், விட்டு விட்டுத்தான் பார்த்தேன்.  அப்படிப் பார்த்தாலும் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் வரை இந்தப் படத்தைப் பற்றி நினைக்காமலில்லை 


ஒரு கிராமத்துச் சூழலில் நடைபெறும் இந்தக் கதையில் எல்லாம் இயல்பாக இருப்பதுபோல் இருக்கிறது.  சூபிக்கும் சுஜாதாவிற்கும் ஏற்படும் காதல் பரவசத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.  அந்தக் காதல் நிறைவேறாது என்றாலும் வாய் பேச முடியாத நிகழும் இந்தக் காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.

சுஜாதா ஒரு வாய் பேச முடியாத ஒரு அழகான பெண்.  அவளுக்கு வாய்த்தான் பேசமுடியாதென்றாலும் காது நன்றாகக் கேட்கும்.  முஸ்லிம் குடும்பங்களிருக்கும் நடுவில் சுஜாதா குடும்பமும் வசிக்கிறது. 

இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியே அற்புதமாக அமைந்திருக்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஊரை விட்டுப் போன சூபி அந்த ஊருக்குத் திரும்பி வருகிறான்  உண்மையிலேயே அவன் சாவதற்குத்தான் அங்கு வருகிறான்.   பின் இந்தப் படம் பின்னோக்கிச் செல்கிறது.  சுஜாதாவும் சூபியும் சந்திக்கும் காட்சிகளிலிருந்து  ஆரம்பமாகிறது.  ஒருவருக்கொருவர் பேசாமல் காட்டப்படும் காதல் கதையைத் தத்ரூபமாகக் காட்சி படுத்திருக்கிறார்கள்.  

இசையும் நடனமும் இப்படத்தில் முக்கியமாகக் காட்டப் படுகின்றன.  ஆரம்பத்தில்  சூபி   காதல் அவள்  அப்பாவால் தடுக்கப்படுகிறது.  ஒரு கட்டத்தில் சூபியுடன் ஓடிப் போய்விடலாமென்று சுஜாதா நினைக்கிறாள்.  அதைத் தடுத்து விடுகிறார் அவள் அப்பா.  ஏற்கனவே ராஜீவ் குடும்பத்தினருடன்  அவள்  திருமணம் நிச்சயமாகிறது. . 

சூபி அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறான்.  சுஜாதா அவள் அப்பா விருப்பப்படி ராஜீவ்வை திருமணம் கொள்கிறாள் துபாய்க்குச் சென்று விடுகிறாள். ராஜீவ்வை மணம் முடித்தாலும் அவள் சூபி நினைவாகவே இருக்கிறாள். 

பத்தாண்டுகளுக்கு முன் போன சூபி திரும்பவும் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருகிறான்.  வந்த இடத்தில் இறந்தும் விடுகிறான்.   துபாயில் இருக்கும் அவர்களுக்குச் செய்தித் தெரிகிறது.  அதைக் கேட்டவுடன் சுஜாதா கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.  இந்தச் சம்பவத்தை அற்புதமாகப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் நாரான புழா ஷான்வாஸ்.  

இதுதான் முதல் படம் ஒடிடி பிளாட்பார்ம் மூலம் காட்டப்படுகிறது.  மனைவியை அழைத்துக்கொண்டு சுஜாதாவின் கிராமத்திற்கு வருகிறான்.  த

சுஜாதா சூபி நினைவாகவே இருக்கிறாள்.  ஊரிலிருந்து வந்ததிலிருந்து  படபடப்பாக இருக்கிறாள்.  ராஜீவ்வும் பரபரப்பாக இருக்கிறான். 

அடுத்தாள்  அவன் ஊருக்குத் திரும்ப வேண்டும்.  ஒருநாள்தான் அவன் இங்கிருப்பதாகத் திட்டம்..  சவ அடக்கம் நடக்கும் இடத்திற்கு ஏர் போர்டிலிருந்து நேராக காரில் போகிறார்கள் அவனும் சுஜாதாவும்..

நிம்மதி இல்லாமல் இருக்கிறாள் சுஜாதா.  அவர்கள் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் செல்கிறார்கள்.  ஆனால் சுஜாதா காரிலேயே இருக்கிறாள்.  

அவர்கள் பெண்களை சவம் அடக்கம் செய்யுமிடத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.  அதனால் சுஜாதா காரிலேயே அமர்ந்து இருக்கிறாள்.  துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். அவள் கணவன் ராஜீவ் சவ அடக்கத்திற்குப் போகிறான்.  சவக்குழியில் ஒரு பிடி மண்ணத் தூவுகிறான்.

திரும்பவும் அவர்கள் சுஜாதா அப்பா அம்மா வசிக்கும் வீட்டிற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கோ இவர்களைப் பார்க்கும்போது திகைப்பு.  

அவர்கள் துபாயிலிருந்து புறப்படும் போது யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.  சுஜாதா துக்கம் தாங்காமலிருக்கிறாள்.  ராஜீவ் அடுத்த நாள் ஊர் திரும்ப வேண்டுமென்று இருக்கிறான்.  பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்ள நினைத்தபோது பாஸ்போர்ட் இல்லை என்று தெரியவருகிறது.  உடனே பதட்டமடைகிறான்.  எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.  தன் மனைவி சுஜாதாவைத் திட்டுகிறான்.  சுஜாதாவிற்கு வாய்த்தான் பேச முடியாது தவிர அவளுக்கு யார் பேசுவதும் கேட்கும்.

அவனுக்குச் சந்தேகம் வருகிறது.  பிணத்தை அடக்கம் செய்யும்போது சவக்குழியில் குனிந்து மண்ணைப் போடும்போது அவன் வைத்திருந்த பாஸ்போர்ட் கீழே விழுந்து விட்டிருக்குமா என்ற சந்தேகம் ராஜீவ் மனதில் எழுகிறது.  

புதைக்கும் இடத்திற்குப் போய் கல்லறையைத் தோண்டுகிறார்கள்.  அங்கே கிடைக்கவில்லை.  இரவு நேரத்தில் யாருக்கும்  தெரியாமல் பதட்டத்துடன் தோண்டுகிறார்கள்.  வீட்டிலேயே கீழே விழுந்து கிடந்த பாஸ்போர்டடை சுஜாதா கண்ணில் பட,  எடுத்துக்கொண்டு சவக்குழி இடத்திற்கு வருகிறாள்.

முதன் முதலாக  சுஜாதா சூபியைச் சந்திக்கும் பேருந்தில் சூபி ஒரு பச்சை நிற மாலையை பேருந்தில் விட்டுவிட்டுச் சென்று விடுவான்.  அவன் நினைவாக அதை எடுத்து வைத்துக்கொண்டிருப்பாள் சுஜாதா. இப்போது .அதை சவக்குழியில் போடுகிறாள்.  கூடவே அவன் நினைவையும் அழித்து விடுகிறாள். 

அவர்கள் துபாய் திரும்பும்போது ராஜீவ் அவளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.  அவர்களிடையே காதல் துளிர் விடுகிறது. 

கொஞ்சம்கூட அலுக்காமல் இந்தப் படத்தைப் பார்த்துரசித்தேன் 

 


Comments