Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 65

அழகியசிங்கர்  

குழந்தைகள்

பொன். தனசேகரன்



காகிதங்களில் கிறுக்கட்டும்
குழந்தைகள் விருப்பம்போல;
திட்டாதீர்கள்.

சுதந்திரமாக
வார்த்தைகளைக் கொட்டட்டும்;
தடுக்காதீர்கள்.

விரும்பாததைக் கேட்டு
முரண்டு செய்யலாம்:
அடிக்காதீர்கள்.

உங்கள் பழக்கங்களை
மிரட்டித் திணிக்காதீர்கள்.

விளையாட்டுப் பொருள்களைக்
கொடுத்து
கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.

நடைவண்டி இல்லாமலே
நடை பழகும்
குழந்தைகள்



நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு - கவிதைகள் - பொன்.தனசேகரன் - பக்கம் : 80 - வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. - வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.

Comments