Skip to main content

இரண்டு கவிதைகள்

ஒழுங்கு

வரிசையாக ஆடுகின்றன
பிரசவ ஆஸ்பத்திரி
தொட்டில்கள்
வரிசை வரிசையாக
பார்த்து சிரிக்கிறார்கள்
பார்வையாளர்கள்
வரிசை தவறாமல் பெற்று
வரிசையில் சேர்த்து
உச்சி முகர்கிறார்கள்
தகப்பன்கள்
வரிசையாக நின்றும்
வரிசையில் தின்றும்
வரிசையில் படுத்தும்
வரிசையாகவே செத்தும் போகிறார்கள்

ஒரு மழை இரவின்

ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்


Comments

Chandran Rama said…
ஒரு மழை இரவின் ......
well written thoughts...mmm!