Skip to main content

தேடல்


எத்தனை முறை உதிர்ந்தாலும்

அத்தனை முறையும்

பூத்துத்தொலைக்கும்

காதலை எழுதிய

இறகொன்றும்


எத்தனை முறை பெய்தாலும்

அத்தனை முறையும்

கொட்டித்தீர்க்கும்

மழையில் நனைந்த இறகொன்றும்


நூறாண்டுகளாய்

அலைந்துக்கொண்டிருக்கும்

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்றும்


தேடிக்கொண்டிருக்கின்றன.


தீராத பக்கங்களில்

எந்த கூட்டில்

அமர்ந்துள்ளது அதுவென்று.

Comments