Skip to main content

அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை




அழகியசிங்கர்




இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.  

நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.'

168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.  

நான் முதலில் இத்தொகுப்பில்  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,' என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கதையûப் படித்த தேதி 31.10.2019.  அதன் பின்  10.11.2019 முழுப் புத்தகத்தைûயும் படித்து முடித்தேன்.

33பக்கங்கள் கொண்ட இது சிறுகதை என்பதை விடக் குறுநாவல் என்று தோன்றுகிறது.  காது செவிடாக உள்ள ஒரு பெண்ணின் கதை.   எனக்கு என்னமோ உலகத் தரமான கதைகளில் இதைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.   இப் புத்தகத்தின் 62 பக்கத்தில் காது செவிடாக இருப்பவர்களின் அவதியைச் சொல்கிறார்: 'செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும்.  அவை சூடானவை நெருப்பாய்ச் சுடுபவை.  ஒலி ஒரு சாட்டை.  வலியைத் தருவது.  அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு.  எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு.  காட்சி உண்டு.  மண் சிவப்பு.  ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு.  குங்குமச் சிவப்பு.'

சிறு குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றிருந்தான் வசந்தன் என்று ஆரம்பமாகும் இந்தக் கதை.  மைதிலி - வசந்தன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அப்போதுதான் ஆஸ்பத்திரியில் ஒரு அனாதை குழந்தை கிடைக்கிறது.

  அதற்கு தேன் மொழி என்ற பெயரை வைத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துப் போகிறான்.  அந்தக் குழந்தைக்குக் காது கேட்காது.  காது கேட்காத ஒரு பெண் குழந்தையை வளர்க்கிற பாட்டை கதை விவரித்துக்கொண்டு போகிறது. 

காக்ளியர் அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்துவிடுகிறாள் தேன்மொழி.  வசந்தனுக்கு ஏமாற்றம்.  பிரிந்து விடுகிறான். கடைசிவரை அவனைத் தேடித் தேடிப் போகிறார்கள்.  வசந்தன் கிடைக்கவில்லை.  உண்மையில் காது கேட்காத பெண்ணை அவன் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. 

இறுதியில் கதை இப்படி முடிகிறது.  மொழி ஒரு தொடர்பு.  ஒலி இல்லாமலும் அது  நேரலாம்.  
தேன்மொழி, மைதிலி, வசந்தன்.   

'தொண்டை புடைத்த காகம்' ஒன்று என்ற கதையில்  சன்னல் வழியாக வரும் காக்கை வித்தியாசமான காக்கையாக இருக்கிறது.   மழைக் காலங்களில் சமையலறை சன்னல் மீதுதான் இருப்பு. உப்பு பிஸ்கோத்து போடாமல் க்ளூகோஸ் பிஸ்கோத்து போட்டால் நிமிர்ந்து பார்த்து தலையைத் திருப்பிக்கொள்ளுமாம்.  வறுவல் என்றால் உயிராம். இன்னும் கேட்கும். பதிலுக்குத் தன் வாயில் வைத்திருக்கும் எலும்பு எதையாவது சன்னல் படிக்கட்டில் வைத்துவிட்டுப் போய்விடும். 

ஒருநாள் காகம் கத்துவதைக் கேட்டபோது அது காகம்தானா என்ற சந்தேகம் வருகிறது.

அப்படியே இந்தக் கதை அப்பாவிடம் ஆரம்பிக்கிறது.  சாப்பாடு சாப்பாடு என்று அப்பா கத்துகிறார்.  அவருக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. அப்பாவின் ஞாபகமறதியிலிருந்து ஒரு பெரிய குடும்பக் கதையை விவரிக்கிறார்.  ஒரு மாலை பொழதில் அப்பா காணாமல் போய்விடுகிறார்.  பின் அவரைக் கண்டுபிடித்து ஒரு நர்ûஸ வைத்துப் பார்த்துக்கொள்கிறாள்.  

இரண்டு காதல்களின் தோல்வி, அம்மா விசாலம், அப்பா என்று பலத்த அலைகளாக நினைவுகள் மோதுகின்றன.  அந்தச் சமயத்தில் சன்னலோரம் வந்த காக்கையைக் கோபத்துடன் விரட்டி விடுகிறாள்.  அதன்பின் காக்கை வரவில்லை.  பேருந்தில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காக்கை பஸ்ஸில் அடிப்பட்டு உயிரை விடுகிறது. காக்கையை மட்டும் கூறுவதல்ல இந்தக் கதை.  காக்கை மூலம் எல்லாமும் வருகிறது.  

பயணம் 21, 22, 23 என்று மூன்று கதைகள்.  மூன்றும் மூன்று பயண அனுபவங்கள். கட்டுரைகளா? கதைகளா? நகுலன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் நிகழ்ச்சியை கதையாக மாற்றி இருக்கிறார்.  அதே போல் முயற்சியா இது.  பயணம் 23 பற்றி சொல்ல வேண்டும்.  கதையில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  üஎதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்குகளின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்தான் இருந்தது.

இன்னொரு இடத்தில் பாரதியின் அக்கினிக் குஞ்சு என்ற கவிதையை மோசமாகக் கிண்டல் அடிக்கிறார்.  வக்கிரமான உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கூட கூறலாம். இதோ:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இதற்கு விளக்கம் தருகிறார்.  அக்னிக் குஞ்சு ஆண் குறியாம், காட்டிலோர் பொந்து பெண்ணுடைய யோனியாம், வெந்து தணிந்தது காடுý கலவி உச்சத்தைக் குறிக்கிறது.  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் கலவி இயக்கத்துடைய தாள கதியாம்.. பாரதி பாடலை இவ்வளவு மோசமாக யாரும் கிண்டல் செய்திருக்க மாட்டார்கள்.  பாரதி படித்தால் தற்கொலை செய்துகொண்டு விடுவார்.

üசாம்பல் மேல் எழும் நகரம்ý என்ற கதையை இரண்டு முறைக்குமேல் படித்தேன்.  என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.  அம்பையின் கதை பெண்களைப் பற்றிச் சுழலுகிறது.  துயரம்தான் அதிகம்.  நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு.  பயணத்தைப் பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கின்றன.   இப்புத்தகம் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.  விலை ரூ.195.


Comments