Skip to main content

துளி - 74 - நாவல் எழுதியது எப்படி - 1

துளி - 74 - நாவல் எழுதியது எப்படி - 1


அழகியசிங்கர்



பல ஆண்டுகளாக ஒரு கவிதை எழுதுபவர் என்னுடன் நண்பராக இருந்தார்.  அவருடன் பழகும்போது எனக்கு அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.  அவர் ஒரு கவிஞர். கவிதை மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர் விமர்சகர்.  ஆனால் அவர் நாவல் எழுத வேண்டுமென்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார்.  அவருடைய வாழ்க்கை முறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒருவர் எப்படி அதுமாதிரி வாழ்க்கை நடத்த முடியுமென்று தோன்றியது. ஆனால் அவர் வாழ்ந்து காட்டினார்.  தனக்கு தோன்றியபடி வாழ்ந்தார். திறமை உள்ள ஒருவர். 
புத்தகம் படிப்பார். எழுதுவார் அவ்வளவுதான் அவர் வாழ்க்கை. வறுமையில் அவர் ரொம்பவும் சிரமப்பட்டார்.  மற்ற எழுத்தாளர்களை அவர் மதித்ததே இல்லை.  இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி  நாவல் எழுதினால் என்ன? இந்தக் கேள்விதான் இந்த நாவல்;.  என் நாவல் இப்படித்தான் ஆரம்பித்தது.  ஆனால் அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க முடியவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக நினைத்தபோது எழுதிக் கொண்டிருப்பேன். முடிப்பேன் என்று கூட நினைத்துப் பார்க்கவில்லை. 
திடீரென்று இந்த ஆண்டு அந் நாவலை முடிக்க வேண்டுமென்று தோன்றியது.  அப்படி முடித்ததுதான் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý.   எந்தத் திட்டமிடாமல் எழுதப்பட்டதுதான் இந் நாவல்.  இதை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும்.  அமேசான் கிண்டலில் இந் நாவல் கிடைக்கும்.   




Comments