Skip to main content

துளி : 58 - கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டு விழா


அழகியசிங்கர்



1990ஆம் ஆண்டு விருட்சம் இதழிற்கு கரிச்சான்குஞ்சு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  இலக்கிய நண்பர் சுவாமிநாதன் என்னை கரிச்சான்குஞ்சுவின் வீட்டிற்கு அழைத்துப் போனார்.  நான் அவரிடம் விருட்சம் இதழ் கொடுத்துவிட்டு அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தேன்.  
தற்செயலாக 8வது இதழ் விருட்சம் பார்க்கும்போது கரிச்சான் குஞ்சு விருட்சத்திற்கு எழுதிய கண்ணில் பட்டது.  1990ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜøன் இதழில் எழுதி உள்ளார்.  அதை அப்படியே இங்கு தர விரும்புகிறேன்.
"இளைய தலைமுறையின் விழிப்புக்கும் திறமைக்கும் தங்களை வெளியீட்டுக் கொள்ளம் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாகும் üவிருட்சம்ý இதழ்களை என்னைத் தேடி வந்து கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.  ஆழமாகச் சிந்திக்கவும், தெளிவாகக் கருத்துக்களை வெளியிடவும் பயிலுங்கள்.  பத்திரிகை உலகம் எங்கோ திசை மாறிச் செல்லும் பொல்லாத காலம் இது.  இந்த ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பதே ஒரு பெருமை தரும் விஷயம்."
கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானிடன்  பிரசித்தமான நாவல்.  அப்போது வாங்கியது.  அதை இப்போது இரண்டாவது முறையாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  
நான் ஒரு சில எழுத்தாளர்களுக்குத்தான் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  அதில் ஒன்று கரிச்சான் குஞ்சுவின் இரங்கல் கூட்டம்.  அக் கூட்டத்தில் பெரும்பாலோர் üகரிச்சான் குஞ்சுவிற்கு கொடுக்கவேண்டிய ராயல்டியைக் கொடுக்கவில்லை என்று பேசினார்கள். 
 

Comments