Skip to main content

சத்தமில்லாத ஒரு குறும்படம்.


அழகியசிங்கர்




ஒரு நாள் திடீரென்று ஆந்திரா வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஆர் கே ராமனாதன் என்கிற நண்பருக்கு போன் செய்தேன்.  ஒரு குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்றேன்.

அவர் ஒரு நாடக நடிகர்.  திறமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர்.  என்னுடைய வசனமே பேசாத குறும்படத்தில் திறமையாக நடித்துக் கொடுத்துள்ளார்.

நான் பழைய  சோனி காமெராவில் இந்தப் படத்தைத் தயாரித்தேன்.  20 நிமிடங்கள்வரை இந்தப் படம் வரும்.

மேலும் இந்தப் படத்திற்கு மெருகேற்ற வேண்டுமென்று தோன்றியபோது நண்பர் கிருபானந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.  அவர் அதற்கு இசையைச் சேர்த்து, யார் எடுத்தது, யார் நடித்தது என்றெல்லாம் சேர்த்து விட்டார்.  இதே அந்தப் படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

நடித்துக் கொடுத்த ஆர் கேவிற்கு நன்றி.  கிருபானந்தனுக்கு நன்றி.


Comments

Popular posts from this blog