Skip to main content

மூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டம்


அழகியசிங்கர்






இது வரை 8 கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  முதலில் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் திரூப்பூர் கிருஷ்ணன் தலமையில் ஜøன் மாதம் 2017 ஆண்டு இக் கூட்டத்தைத் துவக்கினேன்.  திருப்பூர் கிருஷ்ணன்தான் இதுமாதிரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்.  அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும்  கூட்டங்களை நடத்தி வருகிறேன்.  இதுவரை நடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் திருப்தியை அளித்து உள்ளன. எல்லாவற்றையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.  

போன மாதம் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ராகஷ் பற்றி பேசினார். இதோ இந்த மாதம் 17ஆம் தேதி கல்யாணராமன் (பேராசிரியர்) கு அழகிரிசாமியைப் பற்றி..

இக் கூட்டங்களில் இரண்டு விதமான போக்குகளை நான் காண்கிறேன். ஒன்று : ஒரு எழுத்தாளரை நன்கு அறிந்துகொண்டு அவருடன் பழகிய நட்புடன் அவர் படைப்புகளைக் குறித்தும், அவரைக் குறித்தும் பேசுவது.  இன்னொரு போக்கு அந்த எழுத்தாளரையே தெரியாமல் அவர் படைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பேசுவது.  கல்யாரணராமன் அழகிரிசாமியின் கதைகளை மட்டும் படித்துவிட்டுப் பேசினார்.   அந்தக் கதைகளை முழுக்க முழுக்கப் படித்துவிட்டு ஞாபகத்திலிருந்து அக் கதைகளின் பெருமைகளைப் பற்றி பேசினார்.   

நான் கொடுத்த ஒரு மணி நேரம் அவர் பேசுவதற்குப் போதாது என்று எனக்குத் தோன்றியது.  மேலும் அவர் ஒரு கதையை எடுத்தே ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவார் என்று தோன்றியது.   இக் கூட்டத்தில் பேசியதை கூடிய விரைவில் வீடியோவில் பதிவு செய்ததை வெளியிடுகிறேன். 

Comments

Popular posts from this blog