Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -47

அழகியசிங்கர்


 கடைசி பக்கத்தை நிரப்ப


தமிழ்மணவாளன்





கவிதைகளாலான புத்தகத்தின்
காலியாயிருக்குமிக்
கடைசி பக்கத்திற்காக
கவிதை கேட்கிறார்கள்

யாரிடம் கேட்டால்
மழை பெய்யும் மேகம்

யாரின் வேண்டுகோளுக்கு
தலையசைக்கும் மரங்கள்
காற்றடித்து.

வேண்டும் எனில் இயலுமோ
கவிதை.

ஆயினும்
ஒன்று செய்யலாம்
அடுத்து இயல்பாய்
பெய்யும் மழையை
வீசும் காற்றை
இந்தப் பக்கத்திலிருந்து தொடங்குமாறு.


நன்றி : அலமாரியில் ஓர் இராஜகிரீடம் - கவிதைகள் - தமிழ்மணவாளன் - கோமளவல்லி பதிப்பகம், 18 பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051 - பக்கங்கள் : 96 - விலை : 30.00 - வெளிவந்த ஆண்டு : 2000



Comments

Popular posts from this blog