Skip to main content

பத்து கேள்விகள் பத்து பதில்கள்


பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில்  படைப்பாளிகளைப் பேட்டி எடுத்து என்னுடைய இணையதளத்திலும் முகநூலிலும் கொண்டு வருகிறேன்.
    முதல் பேட்டி அசோகமித்தரனை வைத்து எடுத்தது.  அடுத்தது எஸ் வைதீஸ்வரனின் பேட்டியை வெளியிட்டேன். 
    மூன்றாவதாக சாருநிவேதிதாவைப் பேட்டி எடுத்துள்ளேன். 
    சமீபத்தில் சாருநிவேதிதாவின் இரண்டு நாவல்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.  ஒரு நாவல் ராஸ லீலா, இன்னொரு நாவல் புதிய எக்ûஸல்.  புதிய எக்ûஸல் நாவலை இப்போதுதான் படிக்கத் தொடங்கி உள்ளேன்.  867 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  எனக்குப் படித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகுமென்பது தெரியாது.  ஏற்கனவே அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  படித்து முடித்தப்பின் என் கருத்துகளை வெளியிடுவேன்.
எழுத்தாளர் சாருநிவேதிதா

Comments