Skip to main content

கதையல்ல....... நிஜம்




பா சிவபாதசுந்தரம்



நேற்று "தீராநதி" அழகியசிங்கரோட கவிதையை படித்தேன். இன்று காலையில் அழகியசிங்கரின் நவீனவிருட்சத்தை பற்றி விநாயக முருகனின் பதிவையும் பார்த்தேன். அழகியசிங்கர் எங்கள் கல்லூரியிலுள்ள இந்தியன் வங்கியின் கிளையில்தான் மேலாளராக உள்ளார். இன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் அழகியசிங்கரை பார்க்கலாமேன்னு கிளம்பினேன்.

பாங்க் போகும் வழில கிரவுண்ட்ல பொம்பளபிள்ளைங்க கொ-கொ வும், பசங்க கிரிக்கெட்டும் ஆடிட்டிருந்தாங்க. கிரிக்கெட் ஆடுறத பார்த்தவுடனேயே மனசு நமநமக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பல்லாம் பேட்டை கைல வச்சிருக்கவங்கெல்லாம் மனசுல வீராத் கோஃலி, தவான்னு நெனச்சுக்கிட்டிருக்க மாதிரி, அந்த காலத்துல எனக்கு கவாஸ்கர்ன்னு நெனப்பு.(ஆனா ஒரு தடவ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரில நடந்த ஒரு மேட்ச்ல Orthodontist சந்திரசேகர் அடித்த ஷாட்ட காட்ச் பிடிக்கப்போய் மூஞ்சி கிழிஞ்சு வந்தது தனி கதை)மன உந்துதல கட்டுப் படுத்திக்கிட்டு ஒரு வழியா அழகியசிங்கர பார்த்திட்டு திரும்பறேன். கொ-கொ ஆடுற பெண்கள் வழிவிட, சில மாணவிகள் விஷ் பண்றாங்க. என் பார்வை அந்த பவுலிங்க் போடற பையன் மேல.

அநேகமா ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயரா இருக்கலாம். அவன் ஓடிவந்த லாவகம் ஏறக்குறைய ராஜாவின் Chord progression மாதிரி தான் இருந்தது. குறி தவறாத வில்லுல இருந்து கிளம்புற அம்பைப் போல அருமையான பவுலிங். என்னால அதுக்கு மேல பொறுக்க முடியல. பிட்ச்சை நோக்கி நான் நடந்தவாறே அழகியசிங்கர் கொடுத்த ரெண்டு புத்தகங்களையும் ஒரு மாணவனிடம் நீட்ட, அனி்சையாக, பேட்டிங்க் செய்து கொண்டிருந்தவன் என்னிடம் பேட்டை நீட்டினான். ரெடியாயிட்டேன்.

ஆஃப் அண்ட் மிடில் எடுத்துக்கிட்டு கேள்விக்குறி போல குனிந்து செல்லமாக தரையில் ரெண்டு தட்டு தட்டிட்டு நிமிர்றேன். ஒரு கணம் மூச்சே நின்று விட்டது. ஏன்னா கொ-கொ ஆடிக்கி்டிருந்த மற்றும் அதை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த சுமார் இருபது பெண்கள் மிட்விக்கெட் இடத்திலிரு்ந்து நான் ஆடப்போவதை பார்க்க கூடிவிட்டனர். மெதுவா லெக் சைட்ல பார்க்கிறேன். குட்டை சுவரில் உட்கார்ந்திருந்த ஒரு எட்டு, பத்து மாணவிகள் என் பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்தனர். ஸ்டெம்பிற்கு பின்னால் ஒரு ஆறேழு பசங்க. கை லேசா வேர்க்க ஆரம்பிக்குது. பேப்பர் மற்றும் டிவி மூலம் தினம் கிரிக்கெட் தொடர்பு இருக்கிறத தப்பா கணக்கு போடடு்டேன் போல. கடைசியா எப்ப கிரிக்கெட் பேட்டை தொட்டேன்னு ஒரு வினாடி யோசிச்சு பார்க்கிறேன். சனியன் ஞாபகமே வரல. ஒரு வேளை, முதல் பந்துலேயே கில்லி எகிருடுசசுன்ன? என் கால்களும் நடுங்கிற மாதிரி ஒரு உணர்வு. நைசா செல் ஃபோன காதுல வச்சக்கிட்டு ஹலோ ஹலோன்னு சொல்லிக்கிட்டே எஸ் ஆயிரலமான்னு கூட தோணுச்சு. சேச்சே அது இன்னு்ம் அசிங்கமாயிரு்கும்னு தோண, இதென்னடா வம்பாப் போ்சு. விளையாட்டுக்கு ஆரம்பி்ச்சு மானப் பிரச்சினையாயிருச்சேன்னு எம்மேலேயே ஒரு பரிதாபம் வந்திருச்சு(பாவம் டெண்டுல்கர் அந்த கடைசி மேட்ச்சி்ல் எவ்வளவு மன உளைச்சலடைந்திருப்பார்ன்னு தோணுச்சு).

சரி, வருவது வரட்டும்னு நேரா பார்க்கிறேன். பௌலருக்கு பதி்ல் ஒரு தண்ணீர் லாரி கிளம்பத் தயாராவது போல இருந்தது. அதோ ஓடி வர்ரான்..... புல்லட் மாதிரி பந்து அவன் கையிலிருந்து வெளி வருது. நல்ல வேகம். ஒரடி முன்னால் போய் தடு்க்கப்போனேன். பந்து பேட்ல பட்ட மாதிரியே இல்ல. கண்ணுக்கும் தட்டு படல. ஆஃப் ஸ்டெம்ப்புக்கு மூணு அடி தள்ளி எப்வோ என்னை அது கடந்திருச்சு.

அடுத்த பந்துக்கு ரெடியாகுறேன். இந்த வாட்டி என்னை சுத்தி இருக்கிறவங்க யாரையும் பார்க்கல. பௌலர மட்டும் பார்க்கிறேன். அருமையான யார்க்கர் முயற்சி. வேகம் கொஞ்சம் குறைச்சல்தான். ஏறி ஒரு சாத்து சாத்தலாந்தான். ஆனா மிஸ் பண்ணா மிடில் ஸ்டெம்ப் எகிறது உறுதி. நின்ன இடத்திலிருந்தவாறே டிஃபணட் செய்றேன். அவன் அடுத்த பால் இதே மாதிரி போடட்டும், கண்டிப்பா எனனோட ஃபேவரைட்
 ஸ்ட்ரட் டிரைவ் தான்னு நெனச்சுக்கிட்டேன்.

ஒரு சி்ன்ன ஃப்ளாஷ் எனக்குள். ஒரு வினாடி பௌலரோட முகத்த ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். நான் பேங்க்குக்கு போகும் போது போட்ட ஆக்ரோஷம் அவனிட்த்தில் இல்லை. மாறாக ஒரு பயம்தான அவன் முகததிலிருநதது. எல்லா பௌலருக்கும் பேட்ஸ்மேனை அவுட்டாகணும்னு ஒரு வெறி இருக்கும். ஆனா இவன பார்த்தா நான் அவுட்டாயிரக் கூடாதேன்னு கவலை படுற மாதிரி இரு்ந்துச்சு.

ஏறக்குறைய நாம குழந்தைகளுடன் விளையாடி வேணும்னே தோப்பமே, அது மாதிரி. அப்பத்தான் எனக்கு டக்குனு ஞாபகம் வந்துச்சு. நான் இந்த காலேஜுக்கு பிரின்ஸ்பால், பௌலிங்க் பண்றது ஒரு ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் இயர் ஸ்டூடண்ட்னு.

அடுத்த பந்த வேகமா ஓடிவந்து போடுறான்.எதிர் பார்த்த மாதிரி வேகமற்ற ஒரு ஷார்ட் பிச்பால். மிக சுலபமாக குறைந்த மென்க்கெடலில் தரையை தொடாமல் எலலைக் கோட்டை தாண்ட வைக்கும் பந்து. கை பரபரக்குது. அடிச்சா கண்டிப்பா நாளை கல்லூரியில் அது பேசப்படலாம். குறைந்த பட்சம் வேடிக்கை பார்க்கும் சில பெண்களாவது கைதட்டலாம்.

ஒரு அடி பின்னால் சென்று, அதை ரசித்து அன்புடன் பிளாக் செய்துவிட்டு, ஸ்டெம்ப்பிற்கு பின்னால் இருந்தவனிடம், "தேங்க்ஸ்" என்றவாறு பேட்டை ஒரு புன்னகையுடன் கொடு்த்து விட்டு, அழகியசிங்கரை பெற்றுக்கொண்டு என் காரை நோக்கி நடந்தேன்.

Comments

Aekaanthan said…
என்ன சிவபாதசுந்தரம் சார்! ஒரு டி-20 மேட்ச் போன்ற பீடிகை. தடபுடல். நல்லாத்தான் எழுதியிருக்கீங்க! ஒங்க டென்ஷன் புரியுது!

அது சரி, அழகிய சிங்கரிடம் இருந்து என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க!

- ஏகாந்தன்