Skip to main content

மயானத்திலிருந்து




பா. சிவபாதசுந்தரம்


கழற்றி எறிந்த மாலையின்

பூக்களை மேயும் ஆடுகள்

அரிசிதனை கலைத்து

காசை பொறுக்கும் சிறுவர்கள்

காலையில் போன

கதிரவன் வருகின்றான்

மாலை மரியாதையுடன்

மந்திரியும் வர

நாலு நாள் கழித்து

கருமாதி முடிவாச்சு

நான் செத்து இன்றோடு

நாட்கள் பத்தாச்சு



Comments

கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

Popular posts from this blog