Skip to main content

முகங்கள்

சில முகங்கள் வெகு சீக்கிரமாகவே முதுமை
அடைகின்றன. ஏமாற்றங்கள் அவற்றில்
எழுதி ஒட்டியிருக்கும்.
குழந்தைகளின் பிடிவாதத்தினால் தாடைகள் இறுகியிருக்கும்
குடும்பத்தில் பல சாவுகளினால் மூக்கு எப்பொழுதும்
விம்மிய நிலையிலிருக்கும்
ஒவ்வொரு முகமும் கர்ப்பப்பையினுள்ளே நீண்டநேரம்
தீர்மானித்திருக்கும் - லௌகீக விஷயங்கள் தன்னை எப்படி
பாதிக்கும் என்பதை - பிரச்சினைகள் வரும்போது குப்புறப்
படுப்பதா கண்காணாத ஊருக்கு ஓடிவிடுவதா என்பதை.
சில முகங்கள் விட்டுக் கொடுக்கின்றன
வேறு சிலவோ விடைத்து நிற்கின்றன
சில முகங்கள் பிரகாசமாய் தெளிவாய் தெரிகின்றன
வாழ்க்கையின் விடை தேடி அவற்றை நாம் ஆராய்கிறோம்
முப்பத்தோரு வயதான முத்துப்பல்லழகி நிர்மலா சொன்னாள்
üஎன் அப்பா பெயர் ராமச்சந்திரன்.நாங்கள் குழந்தைகள்
கூட்டாக ராமோ, ராமா, ராமென என்று அவர் காதுபடி
ராம சப்தம் சொல்வோம்.ý
அவள் கண்களின் உற்சாகம் உங்களையும் பற்றிக்கொள்ளும்
ரெடிமணியில் முப்பதாயிரம் இழந்த ராகவன் சொன்னான்.
üஉலகம் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. இந்த நம்பிக்கை
இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை.
நம்மில் சிலருக்கோ வசவுகள். வேதனைகள் உள்தங்கி
விடுகின்றன. கால்கள் தடுமாறி வழி தவறுகின்றன
பசியும், குளிரும் பலரை பாதிக்கிறது
முகங்கள் மாறுகின்றன. அதில் ஒன்றும் தவறில்லை
காலை எழுந்ததும் கண்ணாடியில் உற்று கவனியுங்கள்
நீங்கள் யார் என்பது உங்களுக்குப் புரியக்கூடும்.

Comments

காலங்கள் மாறினாலும் முகங்களின் காட்சிகள் மாறுவதில்லை.. ஐராவதத்தின் கவிதையினை படிக்கத் தந்தமைக்கு நன்றிகள்