Skip to main content

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாத

பிள்ளையென்ன பிள்ளை?

பேரிரைச்சல் இல்லாத

அருவியென்ன அருவி?

பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி?

சிற்றின்பம் துறக்காத

துறவியென்ன துறவி?

மனைவியர் மனசு நோகப்பண்ணும்

கணவனென்ன கணவன்?

மற்றெந்த உயிரையும்

மதிக்காத

மனிதனென்ன மனிதன்?

மனதில் கல்மிஷம் கொண்டலையும்

பிறப்பென்ன பிறப்பு?

விமர்சனங்களைத் தாங்காத

கலைஞன் என்ன கலைஞன்?

Comments

தமிழின தலைவரை தான் சொல்கிறீர்களா?
Unknown said…
எல்லோர்க்கும் பொதுவாய் சொன்ன கவிதை செந்தில்.
ஆதி said…
//மற்றெந்த உயிரையும்

மதிக்காத

மனிதனென்ன மனிதன்? //

நல்லா இருக்குங்க ஜெகதீசன்.. வாழ்த்துக்கள்