Skip to main content

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று





நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று
சில்லிட்டு காத்திருக்கிறது...
சப்தமின்றி விரைகின்றன
நிலழடுக்குப் பறவைகள்
கருநீல வானில்
அசையும் சித்திரங்களாய்.
பந்தெனச் சுழலும்
உணர்வுக் குவியல்களை
உயர எறிகிறேன்
உயிர் சினக்க.
அவையோ
பறவைகளோடு பயணித்து
அயர்ந்த வேளை
திரும்பி வீழ்கின்றன
பனித் துளிகளாய்.
செய்வதறியாமல்
திகைக்கும் வேளையில்
உள்ளீடற்று
கரையத் துவங்குகின்றன
மனத் துகள்கள்
இருள் உருகும்
இந்நிசப்த பரப்பில்...

Comments