Skip to main content

பங்குனிப் பெருவிழா







ராட்சஸ ராட்டினம்
ஐஸ்கிரீம்,வளையல்
கடைகள் எல்லாம் உண்டு
திருவிழா நடைபெறுகின்ற
பதினைந்து நாட்களுக்கு
நடக்கும் அன்னதானத்துக்கு
கூடும் கூட்டத்தால்
கோயிலே அல்லோலஹல்லோலப்படும்
ராஜகோபாலசுவாமிக்கு
ஏற்றவளாகத்தான் வாய்த்திருக்கிறாள்
செங்கமலத்தாயார்
பங்குனிப் பெருவிழாவில்
கண்ணனுக்கு வெண்ணெய்யை
தின்னக் கொடுக்காமல்
முகத்தில் அடித்து சந்தோஷப்படும்
கோபிகைகள் கூட்டம்
விழா முடிந்து
பெருமானும், பிராட்டியும்
ஊஞ்சல் ஆடுவதைப்பார்த்து
ஆதிசேஷன் பொறாமைபடக்கூடும்
ஏகாந்தமாய் இருக்கும்
பெருமாளின் மனசு
அன்னையாய் அணைவரிக்கும்
தாயாரின் மனசு
நெறைஞ்சி போய் கிடக்கும்
மக்களின் மனசு.




Comments

Popular posts from this blog