Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......





10


பூனையைப்போல அலையும் வெளிச்சம்


குட்டி ரேவதி


கதவுகளை ஓசைப்படாது திறந்து


மழைபெய்கிறதாவென


கைநீட்டிப் பார்க்கிறது வெளிச்சம்


தயங்கியபடி


பின் இல்லையென்றதும்


மரவெளியெங்கும் நிழற்கடைவிரித்து


கூடார முகப்பில் ஏறி அமர்கிறது


வேடிக்கைப் பார்க்க


பூமியெங்கும் பூனை உடலின் நிற அழகுகள்


தனது நிழலே தன்னை


தின்னத் துவங்கியதும்


சரசரவென மரமிறங்கிப் பாய்கிறது


மாடத்துச் சுடருக்கு


மதில் சுவரென விடைத்து நிற்கும்


இரவு முதுகின் மீதமர்ந்து


கூடலின் பேரொளியை சுவீகரிக்கும்


நிலவின் அகன்றவிழியால்


Comments

Popular posts from this blog