Skip to main content

ஒரு கவிதை




ஒவ்வாத வேலையிலிருந்து

மாநகரப்பேருந்தில்

திரும்பிக்கொண்டிருக்கிறேன்


அளித்த வாக்குறுதிகளைப் போன்ற

நெரிசலில் சிக்கி,


அறையில் இன்னும்

கழுவப்படாமல் இருக்கும்
பாத்திரங்களைப் போன்ற

நெடியிலிருந்து தப்பி,


முட்டி முன்னேறி,

ஜன்னலருகே முகம் வைத்தேன்

கொஞ்சம் காற்றையும்,

நிறைய சந்தோசத்தையும்

அளித்துக் கடந்துகொண்டிருக்கிறது

எங்களூர் பேருந்து

Comments

மண்குதிரை அவர்களுக்கு வாழ்த்துகள்,கவிதை அருமை
na.jothi said…
கடின முயற்சிக்கு பிறகு கிடைக்கும்
வெற்றியின் தருணங்கள்
எப்பொழுதும் சுகம் தான்
anujanya said…
நல்லா இருக்கு. இந்த வாரம் நண்பர்கள் வாரம் போலும். எல்லோர் கவிதைகளும் பிரசுரம்!

அனுஜன்யா
ஆசிரியர் அழகியசிங்கர்

மற்றும் நண்பர்கள் யாத்ரா, புன்னகை, அனுஜன்யா

எல்லோருக்கும் என் நன்றிகள்
Anonymous said…
good one

Popular posts from this blog