Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......





எஸ்.இராமநாதன்

குழந்தை


நள்ளிரவில் வந்த பூனை கண்டு,


பரண் ஏறி அமர்ந்து கொண்டது அது-


அதை விரட்டச் சொல்லி நச்சரிக்கும் இவள்முன்


என் எல்லாச் சாமர்த்தியங்களும் தோற்றுப்போக,


அநேகப் பூனைக்கதைகளைச் சொல்லத் இவள்


பயம் உடைபட்டு குழந்தை தூங்கவென்று.


நேரம் செல்லச் செல்ல


தன் குட்டிக்குப் பால் கொடுத்துத் தூங்குகிற


வளர்ந்த பெரிய பூனையாய் இவள் மாறக்கண்டு


ஒடுங்கிப் போனேன் பயத்தில் நான்.

Comments