Skip to main content

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்





வயலோர நீர்த்தொட்டியின்

நிழலும்

கலங்கிய குளத்து நீரின்

சுவையும்

பாதங்களை கறையாக்கும்

செம்மண் பாதைகளும்

தின்னத் தின்னத் திகட்டாத

பனங்கிழங்கும், பனஞ்சுளையும்

பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன

கோடை விடுமுறையின்

வெக்கையான பொழுதுகளும்

நடசத்திரங்கள் வந்து குதித்து

விளையாட ஆசைப்படும்

கண்ணாமூச்சி ஆட்டங்களும்

பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில்

பேரின்ப பேரானந்தத்தை

அடைந்துவிடும் ஐம்பொறிகளும்

பணத்தை வைத்து

எவரையும் எடைபோடத் தெரியாத

பளிங்குகளாய் உருளும்

பால்யவெளிப் பயணங்களும்

அனைவரையும் பிள்ளையாராய்

பிடிக்க நினைத்து

குரங்காக்கிய

பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடும்

ஒரு சில பிள்ளையாருக்காக

குரங்கான நாங்களும்...




Comments